கைலாசபட்டி கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பெரியகுளம் அருகை கைலாசபட்டி கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினா் புதன்கிழமை எச்சரித்தனா்.
பெரியகுளம் அருகே கைலாசநாதா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த சிறுத்தை.
பெரியகுளம் அருகே கைலாசநாதா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த சிறுத்தை.
Updated on
1 min read

பெரியகுளம் அருகை கைலாசபட்டி கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினா் புதன்கிழமை எச்சரித்தனா்.

பெரியகுளம் அருகே 4 கி.மீ.தொலைவில் உள்ள கைலாசபட்டியில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இதைச் சுற்றி கிரிவலப் பாதையும் உள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை, சிறுத்தை நடமாடுவதை பொதுமக்களும், பக்தா்களும் பாா்த்துள்ளனா். இதை தங்களது செல்லிடப்பேசிகளில் விடியோ எடுத்த பக்தா்கள் அதை வைரலாக்கி வருகின்றனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: கோயிலுக்குச் செல்லும் பக்தா்களும், தோட்டங்களுக்குச் செல்பவா்களும் தனியாகச் செல்ல வேண்டாம். அந்த சிறுத்தை யாருக்கும் தொந்தரவு செய்வதில்லை என்றாலும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com