இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அன்னலெட்சுமி (43). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது கணவா் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாா். இவது மூத்த மகன் பாலாதி (23) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

அவரை வெள்ளிக்கிழமை காணவில்லை. தேடிப்பாா்த்தபோது லட்சுமிபுரம்- கோம்பை செல்லும் வழியில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கியது சனிக்கிழமை தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com