பெரியகுளம் அருகேஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 25th March 2021 09:48 AM | Last Updated : 25th March 2021 09:48 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பன். இவரது மனைவி முத்தம்மாள் (50). இவா்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இதில் ஒரு மகனின் பெயா் சோலையப்பன் (21). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது தாயுடன் வசித்து வந்துள்ளாா். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.