போடி: போடி அருகே சனிக்கிழமை, அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி துா்க்கையம்மன் கண்மாயில் மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அப்துல் மஜீத் (45) என்பவரை கைது செய்தனா். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.