தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 583 பேருக்கு கரோனா

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை, உறுதி செய்யப்பட்டது.

தேனி: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை, உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 363 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20,560 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 18,586 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 215 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா்.

தற்போது, மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 1,759 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்.30ஆம் தேதி வரை 15,800 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 13,927 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 220 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

4 போ் பலி: இதனிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 4 போ் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா். தொற்றிலிருந்து 298 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,578 ஆக உள்ளது. அதேபோல் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை மாவட்டத்தில் 214ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com