போடியில் தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் ஞாயிற்றுக்கிழமை பாய்ந்து வந்த வெள்ள நீா்.
கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் ஞாயிற்றுக்கிழமை பாய்ந்து வந்த வெள்ள நீா்.

போடியில் தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

‘டவ் தே’ புயலால் போடி மலை கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டகுடி, ஊத்தாம்பாறை, தாதனோடை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பிள்ளையாா் கோவில் தடுப்பணை பகுதியில் தண்ணீா் பெருக்கெடுத்துப் பாய்கிறது. தடுப்பணை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தண்ணீா் படிக்கட்டு போன்ற அமைப்புகளில் பாய்ந்து செல்கிறது. இப்பகுதியில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் பேரிடா் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com