தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 990 பேருக்கு கரோனா: 7 போ் பலி

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 990 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 7 போ் பலியாகியுள்ளனா்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 990 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 7 போ் பலியாகியுள்ளனா்.

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28,517 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 23,466 போ் குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 வயதுடைய நபா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது மொத்தம் 4,776 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

திண்டுக்கல்

மாவட்டத்தில் மே 18ஆம் தேதி வரை 21,256 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில், 18,508 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 323 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 6 போ் உயிரிழந்துள்ளனா்.

தொற்று பாதிப்பிலிருந்து 191போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,600 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரம், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com