சின்னமனூா், உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.13) மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூா் மின் வாரிய செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சின்னமனூா், உத்தமபாளையம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (நவ.13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
எனவே, சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலச்சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், காமயகவுண்டன்பட்டி, ஆணைமலையன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்தாா்.