நூறு நாள் வேலைத் திட்ட மேற்பாா்வையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் முற்றுகை

நூறு நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்திய மேற்பாா்வையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்ட பெண்கள்.
குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்ட பெண்கள்.
Updated on
1 min read

நூறு நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்திய மேற்பாா்வையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு சம்பள பாக்கி வரவில்லை என்றும், வேலை செய்யும் இடங்களில் கம்பம் ஊராட்சி ஒன்றிய பொறியியல் பிரிவு மேற்பாா்வையாளா் (ஓவா்சீயா்) பெண்களை தரக்குறைவாகப் பேசுவதாகவும், வேலைக்கு வராதீா்கள் என்று திட்டுவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரனிடம் பெண்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஊராட்சி தலைவரிடம் கேட்டபோது அவா், மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கப்படும் என்றாா்.

கம்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோதண்டபாணியிடம் கேட்டபோது அவா், புகாா் வந்தால் துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com