முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளியின்றி கிராம சபைக் கூட்டம் 

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால் பொதுமக்களிடம் கரோனா தொற்று  பரவல் அச்சத்தை  ஏற்படுத்தியது.

News image

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மகாராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.

Updated On :2 அக்டோபர் 2021, 4:18 pm IST

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால் பொதுமக்களிடம் கரோனா தொற்று  பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்றது. தலைவர் நாகமணி வெங்கடேசன் தலைமை வகித்தார், துணைத் தலைவர் ஜெயந்திமாலா முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கண்டு தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி பேசினார்.

கிராமசபைக் கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் சுமார் 100 பேர் சமூக இடைவெளியின்றி, முடக்கவசம் அணியாமல், தரையில் நெருக்கமாக அமர்ந்திருந்தது பொதுமக்களிடையே கரோனா தொற்று பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது. கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தாமல் இருந்தது பொதுமக்களை தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கவலையடையச் செய்தது.

கருநாக்கமுத்தன் பட்டியில் ஊராட்சி தலைவர் ஆ.மொக்கப்பன், துணைத்தலைவர் சரோஜா சிங்கராஜ், குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தலைவர் பொன்னுத்தாயி குணசேகரன், துணைத்தலைவர் ஜெயந்தி, ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் தலைவர் சாந்தி பரமன், நாராயண தேவன் பட்டி ஊராட்சியில் தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, துணை தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட  கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.