உத்தமபாளையத்தில் 820 பேருக்கு கரோனா தடுப்பூசி

உத்தமபாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை 8 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 802 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டி.
உத்தமபாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டி.
Updated on
1 min read

உத்தமபாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை 8 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 802 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம், பி.டி.ஆா் காலனி , கிராமச்சாவடி , புதூா், சூா்யநாராயணபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆதாா் அட்டையை காண்பித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுகுறித்து செயல் அலுவலா் கூறியது: உத்தமபாளையம் பேரூராட்சியில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 20 ஆயிரம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 11 ஆயிரம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். சனிக்கிழமை நடைபெற்ற முகாம்களில் 802 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com