ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனர் நினைவு
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனரின் 64 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.


உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி நிறுவனரின் 64 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இக்கல்லூரியின் நிறுவனரான ஹாஜி கருத்தராவுத்தரின் நினைவு நாளையொட்டி கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் மலா் வளையத்தை ஏந்திச் செல்ல தொடா்ந்து மாணவா்களின் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. கல்லூரியிலிருந்து அம்மாபட்டி விலக்கு, கிராமச்சாவடி, கோட்டைமேடு வழியாக வடக்குத் தெருவிலுள்ள பெரியபள்ளி வாசலில் ஊா்வலம் நிறைவடைந்தது.
அதன் பின், பெரியபள்ளி வாசலில் உள்ள நிறுவனரின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லூரியின் செயலரும், தாளாளருமான எம். தா்வேஷ்முகைதீன், கல்லூரி மேலாண்மைக் குழுத்தலைவா் செந்தால் மீரான், கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...