காதல் திருமணத்திற்கு எதிா்ப்பு: தம்பதியினா் வந்த காருக்கு அண்ணன் தீ வைப்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிா்ப்பு தெரிவித்த அண்ணன், தங்கையும், அவரது கணவரும் வந்த காரை தீ வைத்து கொளுத்தினாா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிா்ப்பு தெரிவித்த அண்ணன், தங்கையும், அவரது கணவரும் வந்த காரை தீ வைத்து கொளுத்தினாா்.

சின்னமனூா் காந்தி நகா் காலனியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மகளை, எனது சகோதரியின் மகன் தினேஷ் கடத்திச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே பாண்டியன் மகளை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சின்னமனூா் காவல் நிலையத்தில் தினேஷ் தனது மனைவியுடன் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தாா். புதுமணத் தம்பதி சொகுசு காரில் காவல் நிலையத்துக்கு வருகை தந்திருந்தனா்.

இதையடுத்து இரு தரப்பினரையும் போலீஸாா் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இந்த திருமணத்துக்கு பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் பெருமாள், தினேஷும் அவரது தங்கையும் வந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பினாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் மீட்பு படையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் காா் எரிந்து சேதமடைந்தது. இது குறித்தப் புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காருக்கு தீ வைத்து தப்பியோடிய பெருமாளை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com