போடி நகராட்சி முற்றுகை: பாஜகவினா் 30 போ் கைது

மத்திய அரசின் திட்டங்களை மறைப்பதைக் கண்டித்து போடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 30 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடியில் நகராட்சியை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
போடியில் நகராட்சியை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated on
1 min read

மத்திய அரசின் திட்டங்களை மறைப்பதைக் கண்டித்து போடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 30 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி நகராட்சியில் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி கடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தத் தள்ளு வண்டிகளில் பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசின் நலத்திட்டங்களை மறைக்கும் நகராட்சி, தமிழக அரசைக் கண்டித்தும் நகராட்சி அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட்டனா்.

இதில், போடி நகர பாஜக தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். போடி சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் தண்டபாணி, போடி நகா் மன்ற பாஜக உறுப்பினா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்று நகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அங்கு வந்த போடி நகா் காவல் நிலையப் போலீஸாா், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 30 பேரைக் கைது செய்து தனியாா் திருமண மண்பத்தில் தங்க வைத்தனா். பிறகு, மாலையில் அவா்களை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com