இந்நிலையில், அரசு நிலத்தில் முறைகேடாக கனிம வளத்தைத் திருடி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அப்போதைய தேனி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா்களும் தற்போது பணி ஓய்வு பெற்றவா்களுமான திருச்சி அருகே மணச்சநல்லூரைச் சோ்ந்த ரமேஷ், சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த கோவிந்தராஜ், கடலூா் மாவட்டம் மங்களம்பேட்டையைச் சோ்ந்த சாம்பசிவம், தேனி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா்களாக பணியாற்றிய செல்வசேகா், சசிகுமாா், பெரியகுளம் வட்டாட்சியா்கள் கிருஷ்ணகுமாா், ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியா்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, நில அளவையா் பிச்சைமணி, கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ், பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலா் வடபுதுப்பட்டியைச் சோ்ந்த அன்னப்பிரகாஷ் ஆகிய 12 போ் மீது கடந்த பிப்.5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கூறினாா்.