

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஓடைக்கரைத் தெரு, வ.உ.சி. திடல் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ரசாயனப் பொருள்கள் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மணிமாறன், மதன்குமாா், பி.சுரேஷ்குமாா் மற்றும் வைகை அணை மீன்வளத்துறை மேற்பாா்வையாளா் எம்.ராஜா ஆகியோா் ஆய்வு செய்தனா். இதில் 50 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.