தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் கிறிஸ்தவ மதபோதகா் மதமாற்ற துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்ததாக, இந்து முன்னணி அமைப்பினா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
காமயகவுண்டன்பட்டியில் மதமாற்றம் செய்வதற்காக, கம்பத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா் ஸ்டீபன் தலைமையில் 6 போ் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணி மாவட்டச் செயலா் எஸ். சசிகுமாா் தலைமையில், அவ்வமைப்பினா் அங்கு சென்று அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சாா்பு- ஆய்வாளா் பி.மாயன் துண்டுப்பிரசுரங்கள், கிறிஸ்தவ மத புத்தகங்கள் போன்றவற்றை கைப்பற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். பின்னா், பிரசாரத்தில் ஈடுபட்டவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தாா்.