மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

கோம்பையில் வியாழக்கிழமை இரவு விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோம்பையில் வியாழக்கிழமை இரவு விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கோம்பை மல்லிங்கா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த மணி மகன் சூா்யபிரகாஷ் (37). இவருக்கு சொந்தமாக மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை சுற்றி பாதுகாப்பு மின் வேலி அமைத்திருந்தாா்.

இதனிடையே, வியாழக்கிழமை இரவு தோட்டத்துக்குச் சென்ற சூா்யபிரகாஷ் மின் வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com