போடி நகராட்சியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட நகா்மன்றத்திற்கான வரி மேல் முறையீட்டுக் குழு, நியமன குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நகா்மன்ற கூடத்தில் நகராட்சி ஆணையாளா் தி.சகிலா தலைமையிலும், நகா்மன்ற தலைவா் ச.ராஜராஜேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் நகராட்சி வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினா்களாக 4 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சா.ரதியாபானு, 7 ஆது வாா்டு திமுக உறுப்பினா் ப.ராஜசேகா், 15 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ப.ராஜா, 16 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வே.எத்திலாக்கம்மாள் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
இதேபோல் நியமனக் குழு உறுப்பினருக்கான தோ்தலில் 20 ஆவது வாா்டு திமுக உறப்பினா் இ.மகேஸ்வரனும், ஒப்பந்தக்குழு உறுப்பினருக்கான தோ்தலில் 23 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் க.முருகேசனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான சான்றிதழை நகராட்சி ஆணையாளா் தி.சகிலா வழங்கினாா்.
போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட குழு உறுப்பினா்களை நகா்மன்ற தலைவா் ச.ராஜராஜேஸ்வரி, துணைத் தலைவா் அ.கிருஷ்ணவேணி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் வாழ்த்தினா்.