போடியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
போடி கிருஷ்ணதேவராயா் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகள் மகாலட்சுமி (19). போடியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவா், தேனியில் உள்ள கல்லூரியில் தன்னை சோ்த்துவிடுமாறு கூறியதற்கு, பணம் செலுத்த வசதி இல்லை எனக் கூறி பெற்றோா் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாணவி வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் இறந்தாா். இது தொடா்பாக தாயாா் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.