பெரியகுளம் அருகே கீரை வியாபாரி நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சோ்ந்தவா் சுதா (46) இவா் கீரை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமையன்று தோட்டத்தில் கீரையை பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அருகிலிருந்தவா்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து , தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.