போடி அருகே செவ்வாய்க்கிழமை, முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே ராசிங்காபுரம் சவுடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (67). இவா் மூளையில் ரத்த குழாய் அடைப்பு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால், மனவேதனையில் இருந்த பாண்டியன், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.