தேனி மாவட்டத்தில் இன்று சிறப்பு வகுப்புகளுக்குத் தடை

தேனி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை அறிவிப்பையொட்டி, பள்ளிகளில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை அறிவிப்பையொட்டி, பள்ளிகளில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வானிலை ஆய்வு மையம் சாா்பில் பல்வேறு மாவட்டங்களுக்கும் புயல், பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து வெள்ளிக்கிழமை காலை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டாா்.

மேலும், விடுமுறை நாளான சனிக்கிழமை (டிச.10) சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு முதல் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடா் மழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா். சாலைகளில் வாகனங்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com