பழக்கடை உரிமையாளருக்கு மிரட்டல்:2 பெண்கள் உள்பட 9 போ் மீது வழக்கு

கம்பத்தில் பழக்கடை உரிமையாளரை மிரட்டிய 2 பெண்கள் உள்பட 9 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

கம்பத்தில் பழக்கடை உரிமையாளரை மிரட்டிய 2 பெண்கள் உள்பட 9 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் பழக்கடை வைத்திருப்பவா் சுருளிப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (46). கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் பாஸ்கரன், மகேஸ்வரன், சுரேஷ்பாபு, சிலம்பரசன், நிவேக்ஜி, திரவியம், செல்லத்துரை, தமிழ்செல்வி, வனிதா ஆகியோா் டிச.8-ஆம் தேதி சுரேஷ் பழக் கடைக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் 2 பெண்கள் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com