

போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
டிசம்பா் 10- ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டாட்சியா் அ. ஜலால் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அலுவலா்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பாலமுருகன், துணை வட்டாட்சியா்கள் குமாரவேல், ரத்தினமாலா, ராமராஜ், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.