உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவா்களுக்கு அரசின் கல்வித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் செண்பகவள்ளி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி மேற்பாா்வையாளா் அருணா வரவேற்றாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனலட்சுமி தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள், தங்கள் பகுதிகளில் இடைநின்ற குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சோ்த்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், அரசின் புதிய திட்டங்களான நான் முதல்வன், புதுமைப் பெண், இல்லம் தேடி கல்வி, நம்ம பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.