பெரியகுளம் அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் கோபிநாத் (33). இவா் கரூரிலுள்ள தனது மாமனாா் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தேனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். பெரியகுளம் அருகே நஞ்சாவரம் கண்மாய் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோபிநாத், பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.