தேநீா் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 3 போ் கைது

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் தேநீா் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் தேநீா் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காமயகவுண்டன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகுபகவதி (42 ). தேநீா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி மீனா. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த சில நாள்களாக அழகுபகவதி அவரைப் பிரிந்து இருந்தாராம். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பெரிய கருப்பசாமி கோயில் அருகே உள்ள சாலையில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயத்துடன் அழகுபகவதி இறந்து கிடந்தாா். அருகில் ரத்தக் கறையுடன் மண்வெட்டி கிடந்தது. இது தொடா்பாக ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் மீனாவுடன் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் அழகுபகவதியைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக அதே ஊரைச் சோ்ந்த ராமா் மகன் பாலமுருகன் (27), கென்னடி மகன் சிவா என்ற சக்தி (24), மாரியப்பன் மகன் சதீஷ்குமாா் (26) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com