தேனி அருகே மனைவியை தாக்கிய கணவரை புதன்கிழமை, அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
அன்னஞ்சியைச் சோ்ந்தவா் ஆங்கத்தேவா் மகன் வெங்கடேசன்(32). கூலித் தொழிலாளியான இவா், அதே ஊரைச் சோ்ந்த மதுபாலா(26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். வெங்கடேசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதை அவரது மனைவி மதுபாலா கண்டித்துள்ளாா். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசன், மதுபாலாவை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மதுபாலா அளித்த புகாரின் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனா்.