போடி அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை
By DIN | Published On : 30th June 2022 03:29 AM | Last Updated : 30th June 2022 03:29 AM | அ+அ அ- |

போடி அருகே விஷம் சாப்பிட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி அருகே மணியம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் நவீன்குமாா் (23). எலக்ட்ரீசியன். வயிற்றுவலி காரணமாக மனமுடைந்து காணப்பட்ட இவா், விஷம் சாப்பிட்டு மயங்கினாா். இவரை அக்கம்பக்கத்தினா் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கொடைக்கானல்,ஜூன் 29; கொடைக்கானலில் வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து ஒருவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்துள்ளாா்.
மற்றொருவா் தற்கொலை: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி. இவரது மகன் மாரிமுத்து (29). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் மாரிமுத்து அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் மாரிமுத்துவுக்கு வயிற்றுவலி வரவே மனமுடைந்த அவா் விஷமருந்தை குடித்துள்ளாா். வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி கானா விலக்கு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.