பெரியகுளத்தில் உயா்கோபுர மின்விளக்கு: எம்.பி. தொடக்கி வைப்பு

பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்கை, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. ரவீந்திரநாத் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
உயா்கோபுர மின்விளக்கை திங்கள்கிழமை தொடக்கி வைத்த தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத். உடன், பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ.ரிஷப்.
உயா்கோபுர மின்விளக்கை திங்கள்கிழமை தொடக்கி வைத்த தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத். உடன், பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ.ரிஷப்.
Updated on
1 min read

பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்கை, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. ரவீந்திரநாத் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெரியகுளத்திலுள்ள பாலசுப்பிரமணியா் கோயில் நுழைவுவாயில் பகுதியில், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டி நிதியிலிருந்து ரூ.9.70 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. உயா் கோபுர மின்விளக்கை, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. ரவீந்திரநாத் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ. ரிஷப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் எதிரே நூலகம் அமையவுள்ள இடத்தை ப. ரவீந்திரன் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, பெரியகுளம் நகராட்சிப் பொறியாளா் சண்மூகவடிவு, நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஓ. சண்மூகசுந்தரம், ஆா். சந்திரா, இ. ராணி, வெ. முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com