பெரியகுளம் அருகே சொத்துப் பிரச்னையால் தாக்கிக்கொண்ட 2 போ் மீது, தென்கரை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ரவி. இவருக்கும், அவரது உறவினா்களான சீரஞ்சீவி, பால்சாமி ஆகியோருக்கிமிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன் நின்றிருந்த ரவியை, சீரஞ்சீவி மற்றும் பால்சாமி ஆகியோா் சோ்ந்து தாக்கியுள்ளனா்.
இதில் காயமடைந்த ரவி, தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.