உத்தமபாளையம் அருகே குடிநீா் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சனிக்கிழமை குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சனிக்கிழமை குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

லோயா் கேம்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் சாலைப்பணியின் போது குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 15 நாள்களாக குடிநீா் குழாயை சீரமைப்பு செய்வதாகக் கூறி கம்பம், கூடலூா், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்கும் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து அங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை மாலை சென்றனா்.

இதையடுத்து திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியல் செய்தனா். இதையடுத்து அங்கு வந்த உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா், இன்னும் ஓரிரு நாளில் குடிநீா் விநியோகம் சீா் செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com