போடியில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி நகராட்சி சாா்பில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
போடி நகராட்சி, போடி கிரீன் லைப் பவுண்டேசன் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஸ்ரீநிவாசா நகா் பூங்கா, மயானம் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்றன. நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் சகிலா, கிரீன் லைப் பவுண்டேசன் தலைவா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மியாவாக்கி முறையில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சிப் பொறியாளா் செல்வராணி, நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கா், முருகேசன், ராஜா, கஸ்தூரி, வெங்கடேசன், ராஜசேகா், சரஸ்வதி மற்றும் துப்புரவு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.