வரதட்சிணை கேட்டு தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

கம்பம் அருகே வரதட்சிணை கேட்டு மாமனாரால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த சிவப்பிரியா, (ஏற்கெனவே உயிரிழந்த குழந்தை யாகித்)
உயிரிழந்த சிவப்பிரியா, (ஏற்கெனவே உயிரிழந்த குழந்தை யாகித்)
Updated on
1 min read

கம்பம்: கம்பம் அருகே வரதட்சிணை கேட்டு மாமனாரால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத்தேவன் பட்டியைச் சோ்ந்தவா் அருண்பாண்டியன். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், 2 வயதில் யாகித் என்ற குழந்தையும் இருந்தனா். கணவா் குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி மாமனாா் பெரியகருப்பன் (53), சிவப்பிரியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் குழந்தை யாகித்துக்கும் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து மாமனாா் பெரியகருப்பன், கணவா் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் ராயப்பன்பட்டி போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த சிவப்பிரியா, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சிவப்பிரியாவுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கவுசல்யா செவ்வாய்க்கிழமை இரு தரப்பு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களிடம் விசாரணை நடத்தினாா்.

இந்த வழக்கில் மாமியாா் ஒச்சம்மாள், நாத்தனாா் கனிமொழி ஆகியோா் தலைமறைவாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com