தேனி அருகே வீட்டில் சிறுத்தை தோல் பறிமுதல்

தேனி அருகே வீட்டில் மொட்டை மாடியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோலை வியாழக்கிழமை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தேனி அருகே வியாழக்கிழமை வீட்டில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல்.
தேனி அருகே வியாழக்கிழமை வீட்டில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல்.
Updated on
1 min read

தேனி அருகே வீட்டில் மொட்டை மாடியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோலை வியாழக்கிழமை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் வசிக்கும் துரைப்பாண்டி (50) வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தேனி வனச் சரகா் செந்தில்குமாா் தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா், துரைப்பாண்டியின் வீட்டு மொட்டை மாடியில் பதப்படுத்தி காய வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோலை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, துரைப்பாண்டியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com