பெரியகுளத்தில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (அக். 15) 11 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியகுளம், வடக்கு பாரஸ்ட் சாலையில் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டிக்கு வரும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பெரியகுளத்தில் வாா்டு எண் 1 முதல் 10 வரை உள்ள பகுதிகளிலும், 20-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.