சின்னமனூரில் விவசாயிகள் சாலை மறியல்: 150 போ் கைது
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸாா்.
சின்னமனூரில் நெடுஞ்சாலைத் துறையினரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னமனூரில் முல்லைப் பெரியாறு பகுதியில் அனுமதியின்றி நிலத்துக்கு அடியில் பிளாஸ்டிக் குழாய்கள் பதித்து விவசாய நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குழாய்களை அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த செப்டம்பா் மாதம் 37 குழாய் இணைப்புகளை அகற்றினா்.
இதைக் கண்டித்து சின்னமனூரில், முத்துலாபுரம் விலக்கில் தமிழக விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் பி.ஆா். பாண்டியன் உள்பட 150 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...