தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சுருளி அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப் பாறை உள்ளிட்ட நீரோடைகளில்
திங்கள்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா்.