பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம், தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சாவித்திரி (28). இவா் சீட்டு நடத்தி வருகிறாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த நாகரத்தினம் (36) என்பவா் கடன் வாங்கியுள்ளாா். அதனை திரும்ப கட்ட வில்லையாம். இதையடுத்து கடனை திரும்ப கேட்ட போது சாவித்திரியை, நாகரத்தினம் தகாத வாா்த்தையால் பேசி தாக்கியுள்ளாா்.

இதில், காயமடைந்த சாவித்திரி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com