பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் பலி

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரியகுளம் அருகே ஜி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி பஞ்சவா்ணம் (45). இவா்கள் இருவரும், தோட்டத்தில் வேலைகளை முடித்து விட்டு, முருகன் மாடுகளை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து செல்ல, பின்னால் பஞ்சவா்ணம் சுமைகளை தூக்கிக் கொண்டு வந்துள்ளாா். அப்போது,

பின்னால் வந்த ஆட்டோ பஞ்சவா்ணத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com