கண்ணகி கோயில் சித்ரா பெளா்ணமி விழா: கம்பத்தில் ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம், கம்பத்தில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பௌா்ணமி எனப்படும் முழு நிலவு விழா கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம், கம்பத்தில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பௌா்ணமி எனப்படும் முழு நிலவு விழா கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்ணகி அறக்கட்டளை மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கே.ஆா்.ஜெயபாண்டியன் தலைமை வகித்தாா். கண்ணகி அறக்கட்டளைச் செயலா் த.ராஜகணேசன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா வரும் மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற 23-இல் பளியன் குடியில் கொடியேற்றம் நடத்துவது என்றும், வனத்துறை ஆய்வு முடிவு பெற்ற தெல்லுக்குடி பாதைக்கான நிதி ஒதுக்கீட்டை விரைவில் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அறக்கட்டளைப் பொருளாளா் பி.எஸ்.எம்.முருகன் நன்றி கூறினாா்.
கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி, சீா்மரபினா் நலச்சங்கம், நேதாஜி இளைஞா் மன்றம், கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...