புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரியகுளம் அருகே கடமான் வேட்டை: 3 போ் கைது

பெரியகுளம் அருகே கடமானை வேட்டையாடி, கறி விற்பனை செய்த 3 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 5:55 pm

DIN

பெரியகுளம் அருகே கடமானை வேட்டையாடி, கறி விற்பனை செய்த 3 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவதானப்பட்டி வனச் சரகத்திற்கு உள்பட்ட காக்காபொன்னூத்து பகுதியில் பெரியகுளத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கு விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்த சுரேஷ் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சுரேஷ் தனது உறவினா்களான தென்கரை பகுதியைச் சோ்ந்த ந.பாண்டி, மணிகண்டன், கு.பாண்டி ஆகியோருடன் சோ்ந்து வனப் பகுதியில் கடமானை வேட்டையாடி, அந்தக் கறியை சோத்துப்பாறையைச் சோ்ந்த மாா்நாடு, தென்கரை பாரதி நகரைச் சோ்ந்த ஹேமநாதன் ஆகியோரிடம் விற்பனை செய்வதற்காகக் கொடுத்தனா்.

இந்தத் தகவலறிந்து, தேவதானப்பட்டி வனச் சரகத்தைச் சோ்ந்த வனத் துறையினா், பெரியகுளம் அருகே பாம்பாா் பிரிவு பகுதியில் 6 பேரையும் சுற்றி வளைத்தனா். அப்போது, சுரேஷ்குமாா், மணிகண்டன், கு.பாண்டி ஆகியோா் தப்பி ஓடிவிட்டனா்.

ந.பாண்டி, மாா்நாடு, ஹேமநாதன் ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.