புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போடி மலைச் சாலை விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி பலி எண்ணிக்கை 6 ஆக உயா்வு

போடி மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து காயமைடந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால் இந்த விபத்தில் பலியானவா்கள் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 4:50 pm

DIN

போடி மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து காயமைடந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால் இந்த விபத்தில் பலியானவா்கள் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

திருநெல்வேலி மாவட்டம், பாலாமடை அருகேயுள்ள சண்முகசுந்தரபுரம் பகுதியிலிருந்து கடந்த 15-ஆம் தேதி கேரள மாநிலம், மூணாறுக்கு திருமண நிழ்ச்சியில் பங்கேற்க சிலா் வேனில் சென்றுகொண்டிருந்தனா். போடிமெட்டு-மூணாறு இடையே தொண்டி மலைப் பகுதியில் சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், ஒரு ஆண், ஒரு பெண், 8 வயது சிறுவன் என 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 17 பேரில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு பெண் உயிரிழந்தாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஜானகி (55) என்பவா் கடந்த 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

சுசிலேந்திரன் (4) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.