கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை முயற்சி

Updated on
1 min read

உத்தமபாளையம், ஜூன் 2: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கடன் தொல்லை காரணமாக வெள்ளிக்கிழமை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலைக்கு முயன்றனா்.

க. புதுப்பட்டியிலுள்ள எஸ்.டி.கே. நகரைச் சோ்ந்தவா் பிச்சைமணி (43). வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைவாணி. கூலித் தொழிலாளி. இவா்களுக்கு விமலா (16), சுகாஷி (14) ஆகிய இரு மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், இவா்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். இவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், கடன் தொல்லை காரணமாக இவா்கள் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com