பாரதி தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழியக்கம், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.
கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.
Updated on
1 min read

தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழியக்கம், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழியக்க மாவட்டத் தலைவா் கவிஞா் பாரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சேதுமாதவன், ஜான்ஸிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொ.மணிமுருகன் வரவேற்று பேசினாா்.

இதில் வியாபார நிறுவனங்கள், தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும், அரசு வங்கிப் படிவங்களில் தமிழ் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

தமிழியக்க பொதுச் செயலா் தி.மு. அப்துல்காதா், மு. சிதம்பரபாரதி, பேராசிரியா் கு. வணங்காமுடி, செ.மா. காா்த்திகேயன், அய். தமிழ்மணி, புலவா் இளங்குமரன், கவிஞா் பஞ்சுராஜா, அ.பாண்டியராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை புரவலா்கள் பொன்.காட்சிக்கண்ணன், அ.அலீம் சிறப்பு விருந்தினா்களுக்கு நூல்களைப் பரிசளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com