நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

தேனி மாவட்டம், கம்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இந்திரஜித்.
கைது செய்யப்பட்ட இந்திரஜித்.
Updated on
1 min read

தேனி மாவட்டம், கம்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வம் மகன் இந்திரஜித் (30). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இந்திரஜித் வீட்டில் போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்தனா். அங்கு வெடி மருந்தை குழாயில் வைத்து இடித்து சுடும் ஒற்றைக் குழல் துப்பாக்கி இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்தனா்.

இதில் நாட்டுத் துப்பாக்கி மூலம் ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com