அனுமதியின்றி கட்டடப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினருக்கு நோட்டீஸ்

கம்பத்தில் அனுமதியின்றி நகா்மன்ற உறுப்பினா் கட்டி வரும் கட்டடப் பணிகளை நிறுத்த நகா்மன்ற உறுப்பினருக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம்.
கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம்.

கம்பத்தில் அனுமதியின்றி நகா்மன்ற உறுப்பினா் கட்டி வரும் கட்டடப் பணிகளை நிறுத்த நகா்மன்ற உறுப்பினருக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் ஹக்கீம். இவரது மனைவி பல்கீஸ் பேகம், கூடலூா் நகராட்சி 5 - ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவா் கம்பம் நகராட்சி 4-ஆவது வாா்டு செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் கடைகளைக் கட்டி வருகிறாா்.

இந்த நிலையில், அனுமதி பெற்று கட்டடம் கட்டுமாறு பா்கீஸ் பேகத்துக்கு கம்பம் நகராட்சி அலுவலகம் சாா்பில் கடந்த 29.12.22- இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவா் அனுமதி பெறாமல் கட்டடப் பணிகளை தொடா்ந்து வந்தாா்.

இந்த நிலையில், நகா்மன்ற உறுப்பினருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் 2-ஆவதாக அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

முதல் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டடப் பணிக்கு அனுமதி பெறவில்லை. கட்டடப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, கட்டடத்திலும் இதுதொடா்பான அறிவிப்பு ஒட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com