இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

தேனி மாவட்டம்கம்பம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :16 ஜூன் 2023, 4:54 am

கம்பம்: தேனி மாவட்டம்கம்பம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார்மயம் என  இரண்டு வகையான தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நிரந்தர பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார்மயத்தில் பணியாற்றும் சுமார் 30-க்கும் மேலான ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து கூட்டம் போட்டனர். அரசு அலுவலக வளாகத்தில் கூட்டம் போடக்கூடாது என்று கூறவே அலுவலக முன்புறம் வந்து முற்றுகை செய்தனர்.

பணிச்சுமையை குறைக்க பணியாளர்களை அதிகப்படுத்துதல், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதுகாப்பு உபகாரனங்கள் வழங்க கோரி முழக்கமிட்டனர்.

முற்றுகை செய்தவர்களிடம் சுகாதார துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ரன். அதன்பின்பு முற்றுகையை கைவிட்டு  ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.