கம்பம்: தேனி மாவட்டம்கம்பம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார்மயம் என இரண்டு வகையான தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை நிரந்தர பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார்மயத்தில் பணியாற்றும் சுமார் 30-க்கும் மேலான ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து கூட்டம் போட்டனர். அரசு அலுவலக வளாகத்தில் கூட்டம் போடக்கூடாது என்று கூறவே அலுவலக முன்புறம் வந்து முற்றுகை செய்தனர்.
பணிச்சுமையை குறைக்க பணியாளர்களை அதிகப்படுத்துதல், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதுகாப்பு உபகாரனங்கள் வழங்க கோரி முழக்கமிட்டனர்.
முற்றுகை செய்தவர்களிடம் சுகாதார துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ரன். அதன்பின்பு முற்றுகையை கைவிட்டு ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!

கள்ளக்குறிச்சியில் நான்காவது வெற்றி முனைப்பில் அதிமுக!

ஆற்காடு தொகுதி அலசல்: ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


