92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜூன் 27, 28 தேதிகளில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

எரசக்கநாயக்கனூா், போடிதாசன்பட்டி ஆகிய இடங்களில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:00 pm

DIN

எரசக்கநாயக்கனூா், போடிதாசன்பட்டி ஆகிய இடங்களில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் எரசக்கநாயக்கனூரில் வருகிற 27-ஆம் தேதியும், போடிதாசன்பட்டியில் மறுநாள் 28-ஆம் தேதியும் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், வெறிநாய்கடி தடுப்பூசி, ராணிகட் நோய் தடுப்பூசி போடப்படும்.

மேலும் அறுவைச் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், கரு பரிசோதனை, சாணம், ரத்தம் மற்றும் பால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மலடு நீக்க தாது உப்புக் கலவை வழங்கப்படும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை இந்த முகாமுக்கு அழைத்து வந்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.